Usage of they,their,they’re

There are many words that are constantly misused like: there, they’re or their. But in order to use them correctly you have to first know what they mean!

Here is a rough guide…

There indicates a place or a situation.

Example: There is so much I have to do before I go on vacation.

They’re is a contraction of the two words: they are.

Example: They’re a wonderful couple and it is such a pleasure to be with them.

Their is a plural possessive: something that belongs to more than one person. If you can substitute more than one name (or thing) and not change the meaning of the sentence, then use their.

Example: Raja and Rani lost their father last week.Similarly a lot of us don’t use the words that and which in the right context.

The rule of thumb would be to use which when the phrase is merely an add-on thought or not essential.

Example: She bought me a lovely vase, which was made of terracotta.

The sentence She bought a lovely vase is complete in itself made of terracotta is not essential in completing the sentence and is just an add-on.

If made of terracotta was essential to the sentence you would use that. Example: Do buy that vase that is made of terracotta.

Now the phrase made of terracotta is needed as it specifies the particular vase to be bought.

 

Article Source: DECCAN CHRONICLE

ஹிட்லரின் சூப்பர் ரயில்

“The Breitspurbahn was a planned 3,000 mm (9 ft 10 1⁄8 in) broad-gauge railway, a personal pet project of Adolf Hitler during the Third Reich of Germany, supposed to run on 3 meter gauge track with double-storey coaches between major cities of Grossdeutschland, Hitler’s expanded Germany.” : Wikipedia

ஜப்பானின் புல்லட் ரயில், பிரான்சின் டி.ஜி.வி., சீனாவின் புல்லட் ரயில் ஆகிய ரயில்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடக்கூடிய சூப்பர் ரயில் ஒன்றை தயாரித்தார் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர்  என்ற தகவல், எத்தனை பேருக்கு தெரியும்? ஹிட்லரின் மறைந்து போன சாதனைகளில் ஒன்றான சூப்பர் ரயில், அது ஓடும் முன்பே ஹிட்லர் இரண்டாம் உலகப்  போரில் தோற்று, தற்கொலை செய்து கொண்டதால், ஓடாமல் முடங்கி விட்டது. ஜெர்மனியை உலகின் முன்னணி நாடாக மாற்றுவதற்கு ஹிட்லர் மேற்கொண்ட முயற்சிகளில் முக்கியமானது போக்குவரத்து சீரமைப்பு.

ஹிட்லரின் காலத்தில்தான் முதன் முறையாக வாகனங்கள் தடையின்றி செல்வதற்கு வசதியாக நான்கு வழிப்பாதை அமைக்கப்பட்டு, ஆண்டு முழுவதும் குண்டு குழி இல்லாமல் பராமரிக்கப்பட்டன. இச்சாலைகளுக்கு, “ஆட்டோ பஹன்” என்று பெயர். இதைப் போலவே, ஐரோப்பாவின் ரயில் போக்குவரத்தை தலை கீழாக மாற்றியமைக்க, ஹிட்லர், ஜெர்மனியில் நீராவி இன்ஜின் ரயில்களை ஒழித்துவிட்டு, டீசல் மற்றும் மின்சார இன்ஜின் ரயில்களை அறிமுகப்படுத்தினார். அதைப்போல், அகன்ற ரயில் பாதையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பெரிய, வேகமான ரயில்களை ஓட்ட, அக்காலத்தில்  வசதி இல்லாததால், ஆயிரக்கணக்கானவர்களை ஒரே நேரத்தில் ஏற்றிச் செல்லக் கூடிய அதிவிரைவான ரயில்களை தயாரிக்கும்படி தன் பொறியியல் வல்லுனர்களை ஏவினார். இதன்படி உருவானதுதான் ஹிட்லரின், “சூப்பர் ரயில்!’

கடந்த 1941ல், “சூப்பர் ரயில்’ விடுவதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டது. “சூப்பர் ரயில்’ ஏறத்தாழ 20 அடி அகலமும், 16 அடி உயரமும் உடையது. இரண்டு அடுக்குகளை உடைய மாடி ரயில். இது ஓடும் தண்டவாளத்தின் அகலம் 10 அடி. டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட இதன் வேகம், மணிக்கு 250 கி.மீ., இதற்கு பிரைட்ஸ்பர் பஹன் (அகன்ற ரயில்வே) என்று பெயர் வைக்கப்பட்டது. இதன் முதல் வகுப்பு பெட்டியில், குளியல் அறைகள் மற்றும் சிறிய  சினிமா, நாடக தியேட்டர் ஆகியன இடம்பெற்று இருந்தன. ஜெர்மனியில் இருந்து ஐரோப்பா முழுமையையும் ஆசியாவையும் இணைக்கும் விதமாக சூப்பர் ரயில் விடுவதற்கு ஹிட்லர் கனவு கண்டார். ஆனால், 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் தோற்று, ஜெர்மனி சரண் அடைந்ததைத் தொடர்ந்து, சூப்பர் ரயில் திட்டம் கிணற்றில் போட்ட கல் ஆகியது. இருப்பினும், தற்போது ஓடும் பிரான்சின் டி.ஜி.வி., ஜப்பானின் புல்லட் ரயில் ஆகியவற்றுக்கு முன்னோடி ஹிட்லரின் சூப்பர் ரயில் என்று கூறலாம்.

Article source: DINAMALAR

மெகா சீரியலால் வந்த வினை!

கிழக்கு ஆப்பிரிக்க நாடு ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றி, சென்ற வருடம் இந்தியா திரும்பினார் நண்பர் ஒருவர். திருமணமாகாத அவர், மூன்று ஆண்டு காலம் அந்நாட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றினார். அவரின் தாயையும் உடன் அழைத்து சென்றிருந்தார்.  இந்தியா திரும்பிய சில மாதங்களிலேயே, அவரது வயதான தாயாருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்பட்டு, பலமுறை விழுந்திருக்கிறார். சிறந்த மருத்துவமனை ஒன்றில், மருத்துவப் பரிசோதனை செய்தபின், அவருக்கு, “ப்ளட் பிரஷர்” இருப்பது தெரிய வந்தது. அதற்காக பல மருத்துகளை சாப்பிட்டும், பெரிய மாறுதலோ, முன்னேற்றமோ இல்லை.

அதனால், அவரை ஒரு மனோதத்துவ நிபுணரிடம்  அழைத்துச் சென்றுள்ளார். ஒரு வார ஆலோசனையில், அந்த மனோதத்துவ நிபுணர் சொன்ன தீர்வு, தற்போது நல்ல பலனைத் தருவதாக என் நண்பர் தெரிவித்தார். அவரின் தாயார் இந்தியா வந்த பிறகு, பொழுதுபோக்குக்கு வேறு வழி இல்லாததால், பல மாதங்களாக, “டிவி”யில் வரும் அனைத்து மெகா சீரியல்களையும் தவறாமல் பார்த்து வந்துள்ளார். அந்த மெகா தொடர்களில், பரபரப்புக்காகக் காட்டப்படும் பல காட்சிகளைப் பார்த்து, பார்த்து அக்கதாபாத்திரத்துக்காக கவலைப்பட்டதால், அவருக்கு பிளட் பிரஷர் ஏறிப் போயி ருக்கிறது. தற்போது, சில மாதங்களாக மெகா சீரியல்களைப் பார்ப்பதை தவிர்த்ததில், அவரது பிரஷர் வெகுவாகக் குறைந்து, உடல் நலம் தேறி வருகிறார். பல ஆண்டுகள் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்த வரை, அங்கு தமிழ் சேனல்கள் தெரியாததால், அவற்றை பார்க்காமல் இருந்துள்ளார். இந்தியா வந்த பின், இந்த மெகா சீரியல்களைப் பார்த்ததால் வந்தது பிரச்னை. வயதானவர்கள் பொழுது போக்கு என்ற பெயரில், அனைத்து மெகா சீரியல்களையும் பார்ப்பதை தவிர்க்கலாமே.

article source: DINAMALAR

திண்ணை 28.11.2010

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், இளம் பிராயத்தில், மேடைப் பாடல்கள் பாடுவதில், மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார். அவரது அண்ணன் கணபதி சுந்தரம், சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். அவர் பாடல்களை எழுதிக் கொடுப்பார். அதை மனப்பாடம் செய்து, மேடைகளில் பாடுவார் கல்யாண சுந்தரம்.

அப்போது, அவருக்கு வயது எட்டு. இப்படி அவர் பாடிய மேடைப்பாடல் பயிற்சியே, பின்னாளில் பாமரர்கள் ரசிக்கும் விதத்தில், எளிமையாகப் பாட வழி வகுத்தது. பின்னர், அவரே சொந்தமாகப் பாடல் எழுதி, மேடையில் பாடத் தொடங்கினார். “நல்லதைச் சொன்னா நாத்திகனா?’ என்பது, அவர் எழுதிய முதல் பாடல்.


கும்பகோணம் குருதாஸ் என்பவர், 1946ல், தாமே சுயமாக, நாட்டுப் பாடல்கள் போன்ற கவிதைகளை எழுதி, அதைப் பாட்டுப் புத்தகம் போல, சிறு பிரசுரமாக அச் சிட்டு, கோவில் திரு விழாக்களில், பொதுமக்களிடம் காலணா விலைக்கு விற்பார். கல்யாண சுந்தரத்திற்கும், அதுபோல, தாம் இயற்றும் பாடல்களையும் வெளியிட்டு, பொதுமக்களிடம் பரவச் செய்ய ஆசை. அப்போது, அவருக்கு வயது பதினாறுதான். பட்டுக்கோட்டை நகரின் மணிக்கூண்டுக்கு அருகில் இருந்த, “நைனர் பிரஸ்’ எனும் அச்சகத்தில், தாம் எழுதிய பாடல்களை அச்சிடுவதற்குக் கொடுத்தார்.
புத்தகம் அச்சாகி விட்டது. ஆனால், அதை அச்சகக்காரரிடம் பணம் கொடுத்து வாங்க, கல்யாண சுந்தரத்திடம் பணம் இல்லை. 500 பிரதிகள் அச்சிடப்பட்டிருந்தது. அதில், “25 பிரதிகள் மட்டும் முதலில் கொடுங்கள்; அதை விற்றுக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு, மேலும் கொஞ்சம் பிரதிகள் பெற்றுக் கொள்கிறேன்…’ என்றார். அச்சக உரிமையாளரோ, “பணம் கொடுத்தால் தான் பிரதிகளைக் கொடுப்பேன்…’ என பிடிவாதம் பிடித்தார். அப்போது அங்கே வந்தார், பட்டுக்கோட்டை நகர கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் மாசிலாமணி என்பவர். விஷயத்தைக் கேட்டார். கல்யாண சுந்தரத்திற்கு அவர் ஜாமீன் சொன்னார். அதன் பேரில், 25 பிரதிகளைப் பெற்று  சென்ற கல்யாண சுந்தரம், விரைவிலேயே மீதிப் பிரதிகளையும் பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டார்.

கல்யாண சுந்தரத்திடம் இயல்பிலேயே இருந்த முற்போக்கு மனப்பான்மையும், கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர்கள், இளைஞர் களோடு எளிதாக இறங்கி வந்து தோழமை கொள்ளும் குணமும் தான், அவரை சுயமரியாதை இயக்கத்திலிருந்து, பொதுவுடமை இயக்கத்திற்கு இழுத்து வந்து சேர்த்தன. கல்யாண சுந்தரம், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த பிறகு, கம்யூனிஸ்ட் இயக்கம் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருந்த காலத்தில், பட்டுக்கோட்டை ஊரின் பக்கம் வந்து தலைமறைவாக தங்கியிருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு சாப்பாடு கொண்டு செல்லும் வேலையைச் செய்தார். போலீஸ் அடக்கு முறைக்கு கட்சியினர் ஆளான நிலையில், கட்சி அலுவகத்தில் இருந்த ரெக்கார்டுகளை எல்லாம், கல்யாண சுந்தரம் வீட்டில் தான் மறைந்து வைத்தனர், கட்சிக்காரர்கள். கல்யாண சுந்தரத்தின் நட வடிக்கைகளையும், போலீஸ் கண் காணிக்கத் துவங்கினர். எனவே, கல்யாண சுந்தரத்தின் தந்தை, அந்த ரெக்கார்டுகளை மூட்டை யாகக் கட்டி, கொண்டு போய் குளத்தில் போட்டு விட்டார். அவர் அவ்வாறு செய்யாது போயிருந்தால், கட்சிக்காரர்கள் பலர், போலீஸ் பிடியில் சிக்கித் துன்பப் பட்டிருப்பர்.

கல்யாண சுந்தரம் குடும்பம் சுயமரியாதை இயக்கத்தில் ஈடு பட்டிருந்ததால், அவரது தந்தை காலமாகி, 16ம் நாள் நடந்த சடங்கில் கலந்து கொள்ள, கருணாநிதியை அழைத்தனர். அப்போது, கல்யாண சுந்தரம் மேடையில் ஏறி, கையில், “தப்பு’ வைத்து அடித்து கொண்டு, கொள்கைப் பாடல்களைப் பாடினார். அதன் பிறகு கருணாநிதி பேசினார்.
— ஆர்.சி.சம்பத் எழுதிய,  “பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்’ நூலிலிருந்து.

 

article source: Dinamalar

பார்த்தது..கேட்டது..படித்தது 28.11.2010

“மணி… மாமி தொல்லை தாங்கலே…  பொண்ணுக்கு பாடல் சொல்லிக் குடு, இந்தி லெசன் எடு…” என, உயிரை வாங்குகிறாள்… கணக்கு வழக்கு, ஸ்கூல் பாடமெல்லாம் வேப்பங்காயாச்சே எனக்கு… பொறுப்பு கிட்ட, “பர்மிஷன்” வாங்கு… நாலு நாள் புதுச்சேரிக்கு ஓடி விடலாம்…” என்றார் லென்ஸ் மாமா.

பொ.ஆ., நல்ல மூடில் இருந்த போது, மணக்க, மணக்க காபி போட்டு, பதமாக சீனி இட்டுக் கொடுத்து, “பர்மிஷன்” வாங்கினேன். உடன் சேர்ந்து கொண்டனர் எழுத்தாள நண்பர்கள் சிலர்.

ஓட்டலில் ரூம் புக் செய்து, கும்பலாய் புதுச்சேரியை அடைந்தோம்.
எழுத்து, இலக்கியம், அரசியல், நாட்டு, உலக நடப்பு என ஒரே வாதப் பிரதிவாதங்கள்!
— கடலை ஒட்டிய மணற்பரப்பில் நாற்காலிகள் போட்டு, விவாதம் நடந்து கொண்டிருக்க, ஆங்கில இதழ் ஒன்றை ஒரு கையிலும், மறு கையில் கண்ணாடி கோப்பையையும் வைத்துக் கொண்டு, படிப்பில் மூழ்கி இருந்தார் லென்ஸ் மாமா…

அப்படி என்ன ஆவலாகப் படிக்கிறார் என எட்டிப் பார்த்தேன்… என் ஆவலைப் புரிந்து கொண்ட லென்ஸ் மாமா, “வளர்ப்பு மகன் திருமணத்தைப் பற்றி எல்லாரும் பேசிக் கொண்டிருந்தோமே… அதே போல அல்லது அதை மிஞ்சும் விதமாக வட மாநிலங்களில் திருமணங்கள் நடக்கின்றனவாம்… இதோ, இந்த பத்திரிகையிலே எழுதி இருக்காங்க…” என்றவர், கோப்பையை வாயில் சரித்து, ஒரு மிடறு விழுங்கினார். அதே வேகத்தில், அருகே, சின்ன கரி அடுப்பின் மீது வைக்கப்பட்டிருந்த மண் பாத்திரத்தின் உள்ளே சூடாக இருந்த, “பிஷ் டிக்கா’ ஒன்றை மரக்குச்சியால் எடுத்து லாவகமாக வாயினுள் தள்ளிக் கொண்டு பேச ஆரம்பித்தார்...

“மும்பையில், ஒரு ஆசாமி, தன் மகளின் திருமண அழைப்பிதழை, “கிரானைட்” கல்லில் பதித்து, அதை, வெல்வெட் துணியில் சுற்றி அனுப்பி வைத்தாராம்… ஒவ்வொரு அழைப்பிதழின் மதிப்பும் 550 ரூபாயாம்…
“இன்னொரு ஆசாமி, மரகதங்கள் பதித்த பெட்டியில், வெள்ளியால் செய்யப்பட்ட ரோஜா மலரில் அழைப்பிதழை செதுக்கி அனுப்பி வைத்தாராம்…
“அடுத்தவங்களை விடப் புதுமையா, “காஸ்ட்லி”யா செய்யணுமுன்னு ஒவ்வொருவரும் இப்போ ஆசைப்பட ஆரம்பிச்சிட்டாங்களாம்… கல்யாணம்ன்னா அந்தக் காலம் மாதிரி, உறவுக்காரங்க முன்கூட்டியே வந்து, ஆளுக்கொரு பொறுப்பை எடுத்து நடத்துற சமாச்சாரமெல்லாம் இப்போ மறந்து, மறைஞ்சு போச்சுதே… அதனால, எல்லா வசதியும் உள்ள, “பைவ்ஸ்டார்” ஓட்டல்களைத் தான் பணக்காரங்க நாடி, ஓடுறாங்களாம்…
மும்பையில், பைவ் ஸ்டார் ஓட்டல்களில் 500 முதல் 1000 பேருக்கு ஒரே நேரத்திலே சாப்பாடு போடுற வசதிகளும் இருக்குதாம்…
“இது தவிர, 36 மணி நேரத்திற்கு தாஜ் ஓட்டல் கல்யாண ஹால் வாடகை 15 லட்சம் ரூபாயாம். இதுவே, மெட்ராஸ் தாஜ் ஓட்டல்ல சாப்பாடு ஆர்டர் அவங்ககிட்ட குடுத்துட்டா, ஹாலுக்கு வாடகை கிடையாதாம்.

“அத மாதிரி கல்யாண, ‘டிரஸ்’களுக்கும் எக்கச்சக்கமா செலவு செய்யறாங்களாம்… விமல் துணிகள் தயாரிக்கிற, ‘ரிலையன்ஸ் குரூப்’ கம்பெனியின் அதிபர் அம்பானியின் மகன் இந்தி நடிகை டீனா முனீமை கல்யாணம் செஞ்சுக்கிட்டார் இல்லியா… அப்போ, டீனா அணிஞ்ச கல் யாண டிரஸ் விலை என்ன தெரியுமா?
“எட்டு லட்சம்… எட்டே எட்டு லட்சம்  ரூபாய் தான்!
“வட மாநில ஆண்கள் முன்னப் போல, கோட்டு, சூட்டு போட்டு கல்யாணம் பண்ணிக்கிறது இல்லையாம்… “ஷெர்வாணி”ங்கற டிரஸ் தான் போட்டுக்கிறாங்களாம்… இதோட வில குறைஞ்ச பட்சம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து அதிக பட்சம் ரெண்டு லட்சம் ரூபா வரையாம்!”
“நம்மூர் பொண்ணுகளும் வெளுத்துக் கட்றாங்களாம்… வைர ஊசி சேலைன்னு மார்கெட்டுல இருக்குதாம்…

“இன்னொரு புது, “டிரெண்ட்’ நம்மூர் பொண்ணுகளுகிட்ட வந்திருக்குதாம்… இந்தப் பொண்ணுங்களுக்கு, அவங்க பாட்டி போட்டிருந்த நகை டிசைன் தான் இப்போ பிடிச்சு இருக்குதாம்…”
— இப்படியே அடுக்கிக் கொண்டு போனார்.

“நாம் ஏழை நாடு என்கிறோம்… ஆனால், ஜவுளிக்கடை வாசலிலும், நகைக் கடை வாசலிலும் ரேஷன் கடை, “கியூ’ போல் ஜனங்கள் மொய்த்து நிற்பதைப் பார்த்தால், நம் நாடு ஏழை நாடு தானா என்ற சந்தேகம் எழுகிறது…’ என ஒரு எழுத்தாளர் சமீபத்தில் எழுதியது தான் நினைவுக்கு வந்தது.

***

பிழைக்கப் போகும் இடங்களில் நம்மவர்கள் வாலாட்டாமல் இருக்க மாட்டார்கள். இது, நம்மவர்களின் பிறவி குணம். இந்த குணத்தால், உதை வாங்கித் திரும்புவர் என்பது பல நாடுகளில், பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இப்போது, இதுபோன்ற ஒரு வாலாட்டி வேலை அமெரிக்காவிலும் ஆரம்பமாகி வருகிறது என்பதை சமீபத்தில் படித்த ஒரு கட்டுரை உறுதி செய்கிறது.
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் நம்மவர் நடத்தும் ஆங்கில இதழ் ஒன்றில் இக்கட்டுரை வெளியாகி உள்ளது. (கட்டுரையை படிக்க உதவியது, வழக்கம் போல் உதவி ஆசிரியர்.)

கட்டுரையில் கூறப்பட்டுள்ள பொதுவான தகவல்கள்:
கடந்த 1980 முதல் ’90 வரை அமெரிக்காவில், இந்திய ஜனத் தொகை தான் அதிக அளவில் அதிகரித்துள்ளது. சதவீதக் கணக்கில் பார்த்தால், ’80ல் இருந்த இந்திய மக்கள் தொகை ’90ல் 126 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால், இதே காலத்தில் வெள்ளை அமெரிக்கர்களின் மக்கள் தொகை வெறும் ஆறே ஆறு சதவீதம் தான் அதிகரித்துள்ளது. இதே போல, அங்கு வாழும் கறுப்பர் இன மக்கள் தொகை 13.2 சதவீதம் தான் அதிகரித்துள்ளது.

பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களில், இந்தியர்களே அதிக அளவில் சம்பளம் பெறுகின்றனர். அதே போல, தரமான பணிகளிலும் இந்தியர்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றனர்.
தேசிய அளவிலான தனி நபர் சராசரி வருமானத்திலும் இந்தியர் முதலிடம் வகிக்கின்றனர்.

அமெரிக்கர்களின் சராசரி வருட வருமானம்
5 லட்சம் ரூபாய். ஆனால், அங்கு குடியேறிய இந்தியர்களின் சராசரி வருட வருமானம் 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்.
— இப்படிப் புள்ளி விபரங்களைக் கொடுத்த பின், நம்மிடம் பொருளாதார பலம் பெருத்து வருகிறது… வாங்கும் சக்தியும் அதிகரித்து வருகிறது. இன்றும் சில ஆண்டுகளில் அதிகரித்து விடும்.
இப்படிப்பட்ட நம் இனத்திற்கு அரசியலிலும், முக்கிய இடம் வேண்டாமா?

நாம், இங்கு சிறுபான்மையினர் தான், அதற்காக, “வாய்மூடி’ கிடக்க வேண்டும் என்பது விதி அல்ல… நம் குரல் அரசியல் அளவில் ஒலிக்க வேண்டுமென்பதை உறுதி செய்ய வேண்டும். தேசிய அளவிலும், உள்ளூர் அரசிலும் நம்மக்களுக்கு பங்கு அளிக்கப்பட வேண்டும். அரசியல் அதிகாரத்தில் நமக்கும் ஒரு நாள் பங்கு வேண்டும் என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்…

— என்ற ரீதியில் தொடர்கிறது கட்டுரை…
பிழைக்கப் போன இடங்களில் நம்மவர், ஏன் விரட்டப்படுகின்றனர் என்பதை அறிந்து கொள்ள இந்த ஒரு சிறு உதாரணம் போதுமல்லவா?

***

Article Source: DINAMALAR