தமிழ் பதிவுலகில் எனது பயணம் இனிதே ஆரம்பம்

பல மாதங்களாக தமிழில் எழுத வேண்டும் என்ற ஆவலின் விளைவுதான் இந்த பதிவு. இந்த ஆவலுக்கு வித்திட்டவர்கள் அருமை நண்பர்கள் திரு.பிரபாகரன் மற்றும் திரு.பாரி.

இனி எனது blogஇன் தமிழ் பதிவுகள் மூலமாக நான் இந்த சமுதாயதில் கண்டவை, கேட்டவை, உணர்ந்தவை, உணருபவை ஆகிய அனைத்தையும் இந்த உலகுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வளவு நாட்களாக தமிழில் பதிவெழுதாமல் இருந்ததிற்கு காரணங்கள் பல உள்ளன.

• “தமிழில் type செய்ய வேண்டுமே” என்ற சோம்பேறித்தனம்.

• “ஆங்கில புலமையை சிறிதளவு வளர்த்துக்கொள்ள வேண்டுமே” என்ற எண்ணம்.

• “கணினி சார்ந்த உலக செய்திகளை ஆங்கிலத்தில் மட்டுமே கூறினால் போதும்” என்ற குறுகிய மனப்பான்மை

இனி இந்த தடைகளை மீறி செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

எனது இந்த பதிவை படிக்க வரும் அருமை நண்பர்களுக்கு எனது சிறு குறைகளை பொறுத்துக்கொள்ள வெண்டுகிறேன்.

• ஒற்று இல்லாமல்/சரியாக இல்லாமல் எழுதுவது.

• கோர்வையாக எழுதாதது

• சில இடங்களில் சுவையைக் கூட்ட ஆங்கில சொற்கள் பயன்படுத்துவது.

ஆகிய குறைகள் இதில் அடங்கும்.

நான் பள்ளி பருவத்தில் இருந்தே இருந்தே மிகவும் ரசித்து படித்து வருகின்ற தினமலர்-வாரமலர் பகுதிகளை as it is copy செய்து எனது blogஇல் இதுவரை paste செய்து வந்தேன். இதற்கு காரணம் “நான் பெற்ற இன்பம் இவ்வுலகமும் பெற வேண்டும்” என்பதே.

சிறு வயதில் இருந்தே எனையறியாமல் எனக்குள் ஒரு பழக்கம் உண்டு.   எனது தோல்விகளில் இருந்து மற்றவர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அந்த குணம் எனக்குள் ஏன் வந்தது, எப்படி வந்தது என்று எனக்கே தெரியவில்லை. இந்த குணத்தாலேயே பல நண்பர்களுக்கு “குடும்ப நண்பனாக”(Family Friend) ஆனேன். இதே குணத்தால் இந்த பதிவுலகின் மூலமாக உங்களுக்கும் ஒரு குடும்ப நண்பனாக மாறுவேன் என்ற எண்ணத்தில் இந்த தமிழ் பதிவுலகில் காலெடுத்து வைக்கிறேன்.

 

திண்ணை 13.02.2011

பாரதிதாசன் வைத்துக் கொண்ட புனைப் பெயர்களில் ஒன்று, “கிண்டல்காரன்!” அது, எவ்வளவு பொருத்தமானது என்பதையும் நேரில் பார்த்திருக்கிறேன்.மலேசியாவிலிருந்து, நாடக ஆசிரியர் ஒருவர், கையில் ஒரு நாடகக் கையெழுத்துப் பிரதியோடு பாரதிதாசனிடம் வந்தார். பாரதிதாசன் அதைப் படித்து, கருத்து கூற வேண்டும் என்பது அவர் விருப்பம்.பாரதிதாசன், அவர் கொணர்ந்த சுவடியைப் புரட்டப் புரட்ட, மலேசிய நண்பரின் உள்ளத் துடிப்பு அதிகரித்தது. ஓரளவு கவிஞர் புரட்டி முடித்து விட்டார் பிரதியை.கவிஞரை நோக்கிய மலேசிய நண்பர், “ஐயா!” என்றார்.

“இருக்கு, இருக்கு…எல்லாமே இருக்கு!”

“நல்லா வருங்களா?”

“வராம எங்கே போகப் போவுது… நகைச்சுவைப் பாத்திரங்கள் ரெண்டொன்று சேர்க்கணும்!”

“சேர்த்துட்டாப் போதுங்களா?”

“போதும்… போதும்! அப்படியே காட்சிகளைக் கொஞ்சம் அங்க இங்கே மாற்றி வைக்கணும்!”

“சரிங்க ஐயா!”

“கதை நல்லாருக்கு. கொஞ்சம் உயிரோட்டம் சேர்க்கணும்…”

“அப்புறம் ஐயா?”

“அப்புறம் என்ன… பிரமாதமா வந்திடும். நீ என்ன செய்யறே, வசனத்தை இன்னும் கொஞ்சம் திருத்திக்கணும். குறைக்க வேண்டிய இடத்திலே குறைச்சிடணும்… கூட்ட வேண்டிய இடத்திலே கூட்டணும்; அவ்வளவு தான். மற்றபடி நல்லாவே இருக்கு!”

“நல்லா இருக்குங்களாய்யா?”

“ஆமாம்பா… நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சுச் செய்யணும் நீ!”

அந்தக் கிண்டல்காரன், கொஞ்சம் கூட சிரிக்காமல், கேட்டுக் கொண்டிருப்பவர் ஐயப்படும்படியாக, தொனியில் வேறுபாடு கிளப்பாமல் பேசியதைக் கேட்டேன். உண்மையிலேயே, “பொல்லாத கிண்டல் காரர்”தான் பாரதிதாசன்.

— ஈரோடு தமிழன்பனின், “பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்” நூலிலிருந்து…

***


தேசிய உணர்ச்சியை வெளிக்காட்ட, உணர்ச்சிமயமான சின்னங்களை அரசு பயன்படுத்துகிறது. மக்களுக்கு தேசிய உணர்ச்சியை உண்டாக்க, சின்னங்கள் பயன்படுகின்றன.

சில நாடுகள், தங்களது தேசிய சின்னமாகப் பறவைகள் அல்லது விலங்குகளை வைத்துள்ளன. இது, பழமையான சம்பிரதாயம். ஆதி கால மக்கள் கேடு செய்யும் பிசாசுகளை ஓட்டவும், அதிர்ஷ்டம் உண்டாக்கவும் ஒரு குறிப்பிட்ட பறவை அல்லது விலங்கைத் தேர்ந்தெடுத்தனர். ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தப் பழக்கம் இருந்து வருகிறது.

பருந்து – சில சமயங்களில் இரண்டு தலைகளை உடைய பருந்து, தேசிய சின்னமாகப் பயன்படுத்தப்படுகிறது. புராதன ரோமானியப் படையினர் அவர்களது கொடிகளில் உருவத்தை வரைந்திருந்தனர். நெப்போலியன் பரபரப்பான சாதனைகளை அறிவிக்கும் பிரகடனங்களிலும், இதர தஸ்தாவேஜ்களிலும் பருந்து உருவத்தை அச்சிட்டான்.ஜெர்மானியப் பேரரசும், ரஷ்யாவில் ஜார் அரசும் பருந்து அடையாளத்தை வைத்திருந்தனர். அமெரிக்க அரசும் பருந்து சின்னத்தை வைத்துள்ளது. அமெரிக்க யூனியனில் இருக்கும் ஒவ்வொரு மாநிலமும் தனிச் சின்னங்களை வைத்துள்ளன. தனியொரு நட்சத்திரம் (டெக்சாஸ்),

சீமை எலி (உரிசான்),

சூரியகாந்திப்பூ (கன்சாஸ்),

ஜாதிக்காய் (கன்னக்டிகட்).
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவற்றைக் கொண்ட பிரிட்டனுக்கு, சிங்கம் தேசிய சின்னமாக விளங்குகிறது.

இங்கிலாந்தைத் தனியாக குறிக்கும் போது, “ஜான் புல்” என்று அழைக்கின்றனர்.பழைய நாட்டுப்புற கனவானுடன், காவல் நாயும் சேர்ந்து காணப்படுவதே, “ஜான் புல்” சின்னம். தற்கால சோவியத் ரஷ்யாவின் சின்னம் அரிவாளும், சுத்தியலும்.

இரண்டாம் உலகப்போருக்கு முன்பாக முசோலினி இத்தாலியின் சர்வாதிகாரியாக இருந்தபோது, “பாசிஸ்” என்ற ரோமானிய சின்னத்தைத் தேர்ந்தெடுத்தான். ஒரு கோடாரி சுற்றி வைக்கப்பட்ட இரும்புக் கம்பிக் கட்டுக்கு, லத்தீன் மொழியில் “பாசிஸ்” என்று பெயர். அதிலிருந்து பிறந்ததே, “பாஸிஸ்ட்” என்ற சொல்.

— “சர்வதேசக் கூட்டுறவின் வரலாறுகள்” நூலிலிருந்து...


ARTICLE SOURCE: DINAMALAR

பார்த்தது..கேட்டது..படித்தது 13.02.2011

டில்லி நிருபர் அவர். வட மாநிலக்காரர் என்றாலும், ஐயப்ப பக்தி மிக்கவர். மாலை போட்டு விரதமிருந்து வருடா வருடம் சபரி மலை செல்பவர். இந்த ஆண்டும் மலைக்கு போகுமுன் சென்னை வந்த அவர், என்னையும், லென்ஸ் மாமாவையும் சந்தித்தார்.முன்பு நடந்த ஆப்கன் போரைப் பற்றி விலாவரியாக விவரித்தார் அவர். அங்கு சென்று வந்த, உடன் பணியாற்றும் பத்திரிகையாளரின், அனுபவங்களை விவரித்தார். பாகிஸ்தானில் அகதியாக இப்போது வசிக்கும் ஆப்கன் பெண்மணியின் அனுபவம் கொடுமையானது. அப்பெண், இப்படிச் சொல்லி இருக்கிறாள்:தலிபான்களின் ஆட்சியின் போது, சரியாக உடை அணியவில்லை என்பதற்காக நான்கு ஆண்டுகளுக்கு முன், 20 சவுக்கடி எனக்கு கொடுக்கப்பட்டது. அதன் தழும்புகள் என் முதுகில் இப்போதும் இருக்கின்றன.இந்த சவுக்கடித் தழும்பு இல்லாத பெண்ணையே நீங்கள் ஆப்கனில் பார்க்க முடியாது. தலிபான் சொல்லியிருந்தபடிதான் நான் புர்கா அணிந்திருந்தேன். ஆனால், என் மணிக்கட்டு தெரிந்து விட்டது என்பதற்காக, சாலையில் என்னை நிறுத்தி சவுக்கால் அடித்தனர். அதோடு அவர்கள் என்னை விடவில்லை… அதற்கு மேல் நடந்ததை நான் உங்களுக்கு சொல்ல இயலாது.

இப்படிச் சொன்ன பெண்ணின் வயது 40.

 

***


ஆப்கனில் இப்போது பெண்களின் கல்வியறிவு வெறும் 4 சதவீதம் மட்டுமே. பெண்கள் பள்ளிக்குச் செல்வதை தலிபான் தடை செய்து விட்டது.உடல்நிலை சரியில்லாத பெண்கள், ஆண் மருத்துவர்களிடம் செல்வதும் தடை செய்யப்பட்டது. பெண் மருத்துவர்களோ பிராக்டிஸ் செய்வதற்கு தடை, இந்த நிலையில் பெண்களின் கதி என்ன?வெறும் ஜுரம் வந்தால் கூட, கவனிக்க யாருமின்றி, ஜன்னி கண்டு செத்தனர் பெண்கள். கர்ப்பிணிகளின் நிலையோ சொல்லவே தேவையில்லை.நோய் வந்த பெண்ணுக்கு, ஆப்கனில் உயிர் வாழ எந்த வாய்ப்பும் இல்லை. நோய் முற்றி சாக வேண்டியதுதான்.பெண்கள் வீட்டுக்கு வெளியே சென்று வேலை செய்வதற்கும் தடை. அதனால், விதவைப் பெண்கள் வேலை எதுவும் செய்ய முடியாமல் பட்டினியால் செத்தனர்.இதனால், ஆப்கன் தெருக்களில் நிறைய பெண்கள் பிச்சை எடுப்பதை நீங்கள் பார்த்து இருக்கலாம். (நல்ல வேளை, பிச்சை எடுப்பது தடை செய்யப்படவில்லை!)ஆப்கன் தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண்களில் பலர் போருக்கு முன் ஆசிரியையாகவும், நர்சாகவும் இருந்தவர்கள். பெண்களுக்கான பள்ளிகளும், மருத்துவமனைகளும் மூடப்பட்டு விட்டதால், அங்கு பணியாற்றிய பெண்கள் பிச்சைக்காரிகளாக அலைய வேண்டிய நிலை இருந்தது.இது மட்டுமல்ல, பெண், சப்தம் போட்டு சிரிக்கக் கூடாது. வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். வெளியே வந்தால் அவளுடன் சகோதரனோ, கணவனோ, தகப்பனோ உடன் வர வேண்டும். ஆனால், அநேகமாக அவர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டிருப்பர். வெளியே சம்பந்தமில்லாமல் சுற்றித் திரியக் கூடாது. நடக்கும் போது செருப்புச் சத்தம் கேட்கக் கூடாது.இதில், ஏதாவது ஒன்று நடந்தால் கூட, தெருவில் நிற்க வைத்து பிரம்படி… பிரம்பு என்றால் மெல்லிய பிரம்பு அல்ல; கிரிக்கெட் பேட் அளவுக்கு செய்த தோல் பிரம்பு.மேற்சொன்ன காரணங்களால் ஆப்கனில் உள்ள பெண்களில் 99 சதவீதத்தினர், மன நோயாளிகளாக ஆகி விட்டனர். பல பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.ஆனால், போருக்கு முன் பெண்களின் நிலை எப்படி இருந்தது தெரியுமா? ஆசிரியர் வேலையில் – 70 சதவீதம்; மருத்துவர் – 40 சதவீதம்; அரசு வேலை – 50 சதவீதம் பெண்கள் இருந்தனர். பெண்கள் அப்போது பாராளுமன்றத்திலும், ராணுவத்திலும் இருந்தனர்.பெண்கள் மீது போடப்பட்டுள்ள உத்தரவுகளைப் பாருங்கள்: அவர்கள் அணியும் புர்கா சாக்கு போன்று கனமாக இருக்க வேண்டும். இதை உடம்பு முழுவதும் – கை மணிக்கட்டு கூட தெரியாமல் – போட்டுக் கொண்டு பாலைவன வெயிலில் நடப்பதை கற்பனை செய்து பாருங்கள்!சாலையின் ஓரத்தில்தான் நடக்க வேண்டும், சிரிக்கக் கூடாது. வளையல் மற்றும் வாசனை திரவியம் போடக் கூடாது. இடுப்பை அனாவசியமாக ஆட்டி நடக்கக் கூடாது! வீட்டுக்கு வெளியே யாரிடமும் பேசக் கூடாது!— இவை, அகதிப் பெண் கூறியது!நாய்களை விடக் கேவலமாக பெண்களை நடத்திய மூடர்கள், இப்போதாவது ஒழிந்தார்களே என எண்ணி, பெருமூச்சு விட்டேன்!

***

“ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த போது, அவர்கள் வெளியிட்ட நாணயங்களில் இங்கிலாந்து நாட்டு அரசர்களின் உருவத்தைப் பொறிப்பது வழக்கம். ஆனால், சில நாணயங்களில் மட்டும் இங்கிலாந்து நாட்டு அரசனின் தலையில் கிரீடம் இருப்பதில்லை… காரணம் தெரியுமா?’ எனக் கேட்டார்,”பீச் மீட்டிங்” பெரியவர் ஒருவர். கேட்டு விட்டு அவரே விளக்கம் கொடுத்தார்…”அந்த அரசர், ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார். வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. இங்கிலாந்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு நடந்தால், அரசனுக்குச் சாதகமாகவே தீர்ப்பு கூறுவர். ஆகவே, வெளிநாட்டில் தான் வழக்கை நடத்த வேண்டும் என்று வாதாடினர்.”இந்தியாவில் வழக்கை நடத்தலாம் என்று முடிவு செய்தனர். அப்போது இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று நகரங்களில், தான் நீதிமன்றங்கள் இருந்தன.”மும்பை, கொல்கத்தா ஆகிய இரண்டு நகரங்களில் வெள்ளைக்காரர்களே நீதிபதியாக இருந்ததால், சென்னை நீதிமன்றத்துக்கு வழக்கு வந்தது.”விசாரணை ¬முடிவில், “அரசனின் ஆட்சிக்காலம் ¬முழுவதும் தலையில் கிரீடம் அணிந்து கொள்ளக் கூடாது!” என்று தீர்ப்பு வழங்கினார் சென்னை நீதிபதி.”அரசனும் நீதிபதியினுடைய தீர்ப்பை மதித்து, ஆட்சிக்காலம் ¬முழுவதும் தலையில் கிரீடம் வைத்துக் கொள்ளவில்லை. ஆகவே தான் அந்த அரசன் உருவம் பதித்த நாணயங்களில் கிரீடம் இல்லை!”  என்றார் அந்தப் பெரியவர்.”அப்படி ஒன்றும் சரித்திர ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லையே… நேருவின் உருவம் பொறித்த நாணயமும் நம் நாட்டில் வெளியிடப்பட்டது. அதில், “குல்லா” இல்லாமல், வழுக்கைத் தலையுடன் தான் நேரு உருவம் பொறிக்கப்பட்டது.”இதுபோல் கிரீடம் இல்லாததும் ஒரு யதார்த்தத்துக்காக இருந்திருக்கலாம்… சும்மா, “ரீல்”விடாதீங்க…’ என்றேன்.

— தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது!

***

article source: DINAMALAR