என் மன வானில்
நாம் கடந்து வந்த பாதையை
திரும்பி சென்று பார்க்கிறேன்
என்னுடன் நீ நடந்த பொது
நான் தொலைத்த வலிகளை!
******************************************************
இருந்தும் இல்லாத ஒரு உணர்வு
மறந்தும் போகாத கனவு
கனவு…… இது உணர்வு
காற்றிலே நான் ரசித்த சிற்பம்
கலைந்த மேகங்களாக
உருமாறி தடுமாறி
கரைந்தன மறைந்தன ….
******************************************************
மகிழ்ந்திரு என்றேன்!
மறந்திரு என்றாள்!!
******************************************************
மொழி தெரியாத ஊரில்
கூச்சல் குழப்பங்களுக்கு இடையே
ஆறுதலாக ஒரு தமிழன்
பிறவி ஊமையாய் ….
******************************************************
Her eyes were searching for me
in the nooks and corners of the street.
Little did she know
that i was her shadow!
காற்றாய் நான் வருவேன்
நிழலாய் பின் தொடர்வேன்
******************************************************
How selfish is the human mind !
Invoking God only in need.
Rejoicing and partying
forgetting the bestower.
Lamenting and begging Him
when the joy vanishes.
O! Human mind! know this!
its wisdom.
Ignore it!
its severe madness!
******************************************************
எதிலும் முதன்மை என்பது பெரிதல்ல ,
யாவிலும் திறமை என்பது தான் .
ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று
அறிந்து சொல் வான் முதன்மையான்
ஆராய்ந்து சொல் வான் திறமையான்!
******************************************************
உணவு….
சூடாக இல்லையே என்று
தாயை திட்டும் மகன்!
உண்ண இல்லையே என்று
தாயை கண்டு ஏங்கும் மகன்!
******************************************************
வியத்தகு உலகம் !
பத்து பேர் ஒருவனை அடிக்கும் நகரம் !
ஒருவன் பத்து பேரை அடிக்கும் கிராமம் !!
******************************************************
Words can hurt!
Words can heal!
I have wounds ,
Some have healed.
******************************************************
தவறு ஏதும் செய்யா போதும்
குறை ஓன்று காணும் உள்ளம் .
எதற்கென்று கேட்டால் கூட
சொல்வதற்கு வாய் திறக்கவில்லை.
நான் செய்த தவறு யாதெனில்
தவறு ஏதும் செய்யாததே!
******************************************************
மலையென வளர நினைத்தேன்
செருப்பென மிதித்தார்கள்.
எரிமலையாக மாற எனக்கு
விருப்பமில்லை எனினும்,
காட்டாற்று வெள்ளம்
கரை புரளும் ஒருநாள்.
******************************************************
விழித்திரு! எழுந்திரு! போராடு !
மதங்களை எதிர்த்து அல்ல
மதவெறியில் ஆடும் மடங்களை எதிர்த்து!
******************************************************
அறிகுறி
ஒழுகும் கூரை
மண் தரை
கிழிந்த பாய்
பசித்த வயிறு
சிதறிய பாசம்
வற்றிய கண்கள்
காய்ந்த தொண்டை
ஏங்கும் மனது …
வறுமை என்றார் டாக்டர் !
******************************************************
