பார்த்தது..கேட்டது..படித்தது 31.10.2010

கம்ப்யூட்டர் சாப்ட்வேர் துறையும், கால் சென்டர்களும் சென்னையிலும், சென்னையைச் சுற்றியும் பெருகி விட்டதால், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் வாழ்க்கை முறையும் மாறி விட்டது; வாழ்க்கைத் தரமும் மாறி விட்டது.சமீபத்தில் ஒரு நாள், முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள சென்னை வந்திருந்தார் வெளியூர் நண்பர் ஒருவர். என் உதவியை நாடினார். தி.நகரில் உள்ள ஒரு பரிசோதனைக் கூடத்தில் அவருக்கு, “அப்பாயின்மென்ட்’ வாங்கிக் கொடுத்திருந்தேன். வெறும் வயிற்றுடன் மறுநாள் காலை வரச் சொல்லி இருந்தனர்.தனியே போக அச்சப்பட்ட நண்பர், என்னையும் அழைத்தார். காலை நேரத்தில் அந்த பரிசோதனைக் கூடத்தின் வெளி வாயிலை ஒட்டி வண்டியை நிறுத்தி இறங்கவும், என் வண்டிக்கு பின்னால், ஐந்து புது மாருதி கார்கள், “சர்… சர்’ என வேகமாக வந்து நின்றன.ஒவ்வொரு காரிலிருந்தும் ஒரு இளம் பெண் இறங்கினர்! அனைவருமே 23–25 வயதுக்குட்பட்டவர்கள்.புரிந்து போனது… அவர்கள் அனைவரும் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் என்பது! அந்த நிறுவனத்தினர் உடல் பரிசோதனைக்காக இப்பெண்களை அனுப்பியுள்ளனர் என்பதையும் அனுமானிக்க முடிந்தது.சாப்ட்வேர் நிறுவனங்கள், இரண்டு வருட அனுபவம் உள்ள, “கேன்டிடேட்’களுக்கு மாதம் 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்குகின்றன… இவ்வளவு சின்ன வயதில் இவ்ளோ பணத்தை வைத்து என்ன செய்வர்?உடனே புது மாருதி கார் வாங்க வேண்டியது தான்! மாதத் தவணைத் தொகையாக நிதி நிறுவனங்கள், மாருதி கார்களுக்கு குறைந்த பட்ச தவணை தானே கேட்கின்றன… எனவே, 90 சதவீதம் பேர் கார் வாங்கி விடுகின்றனர்!வாழ்க்கைத் தரம் இப்படி உயர்ந்தாலும், வாழ்க்கை முறை தவிடு பொடியாகி விட்டது! இவர்கள் சூரியனைப் பார்ப்பதே அரிதாகி வருகிறது.எப்.எம்., ரேடியோ நிலையத்தில் பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர், சாப்ட்வேர் துறையில் வேலை கிடைத்து சென்று விட்டார். சமீபத்தில், நம் அலுவலகத்தில் அப்பெண்ணை சந்தித்த போது, “வேலை எப்படி இருக்கும்மா?’ எனக் கேட்டேன்.”வேலை இன்ட்ரஸ்டிங்கா இருக்கு, சவாலா இருக்கு, எதிர்பாராத சம்பளம் மற்றும் அலவன்சுகள் இருக்கு… அருமையான சாப்பாடு குடுக்கறாங்க… ஆனா, வாழ்க்கை முறை மாறிப் போச்சு…”பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்களுக்காகத் தான் சாப்ட்வேர் தயார் பண்றோம்… ஸோ… அவங்களோட தொடர்பு கொள்ள, அங்க பகலா இருக்கும் போது தான் முடியும்… அங்க பகலா இருக்கும் போது, இங்கே இரவு.”எனவே, தினமும் இரவில் தான் வேலை… இரவு வேலை என்றாலும், பெண்களின் பாதுகாப்புக்கெல்லாம் பயம் ஒன்றும் இல்லை. இரவு 2 மணிக்கு முழுச் சாப்பாடு. விடிந்து, வீட்டுக்கு வந்த பிறகு பகல் முழுவதும், ஏன் மாலை வரை கூட தூங்க வேண்டியுள்ளது.”இதனால், சாதாரண மனிதர்கள் செய்யும் எந்த ரொட்டீன் வேலையும், பொழுது போக்கும், உறவினர், நண்பரை காணச் செல்வதும் முடியாமல் போய் விடுகிறது.”சனி, ஞாயிறு தான் விடுமுறை… அந்த நாட்களில் இரவில் தூக்கம் வருவதே இல்லை. இரவு இரண்டு மணிக்கு அகோர பசி எடுக்கிறது. அந்த நேரத்தில் பிரிட்ஜை, கிச்சனைக் குடைந்தால் அம்மா சப்தம் போடுறாங்க.”திங்கள் டு வெள்ளி வரை பசங்க குடிக்கவே மாட்டாங்க… சனிக்கிழமை இரவு சக்கை போடு போடுறாங்க… ஹாஸ்டல்ல தங்கி வேலை பார்க்கும் சாப்ட்வேர் பொண்ணுங்களும், பசங்களோட சேர்ந்து விடிய, விடிய டிஸ்கோ கிளப்புகளில் கும்மாளம் போடுறாங்க… சில பசங்க காரை எடுத்துகிட்டு புதுச்சேரி போயிடறாங்க…”தினம், தினம் ராத்திரியில வேலைக்கு போறப்போ ஒண்ணுமே சொல்லாத அம்மா, ஞாயித்துக்கிழமை சாயங்காலம் வெளியே புறப்பட்டா, “எங்கே போறே?’ன்னு கேக்கறாங்க… இப்படி மாறிப் போச்சு எங்க வாழ்க்கை…’ என நீண்ட விளக்கம் கொடுத்தார்.கடந்த ஞாயிறு நானும், லென்ஸ் மாமாவும் புதுச்சேரி போகும் போது, கிழக்கு கடற்கரை சாலையில் வெவ்வேறு இடங்களில், புத்தம் புது மாருதி கார்கள் நான்கு விபத்துக்குள்ளாகி கிடப்பதைக் கண்டோம்.அப்பெண் சொன்னது போல் சாப்ட்வேர் பையன்கள் செய்த விபத்துக்கள் தான் அவை.இதுவரை, அதாவது, அவர்களது 20–22 வயது வரை பைக் ஓட்டியே பழகியவர்கள் அவர்கள். காரையும் பைக் போலவே நினைத்து, புகுந்து, புகுந்து செல்ல எத்தனிக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளில் வண்டி ஓட்டுவது ஒரு கலை… இவர்கள் கார் டிரைவிங்கிற்கு புதியவர்கள் என்பதால் அக்கலை கைவரப் பெறாதவர்களாக உள்ளனர்.தேசிய நெடுஞ்சாலைகளில் இரவில் கார் ஓட்ட மிகுந்த அனுபவம் தேவை. இவர்கள், பல்வேறு காரணங்களுக்காக இரவில் கார் ஓட்டி மாட்டிக் கொள்கின்றனர். அதுவும் புதுச்சேரியிலிருந்து திரும்பும் போது முழு போதையில், அதீத வேகத்தில் கார் ஓட்டி, விபத்தை சந்திக்கின்றனர்.காருக்கு புதியவர்களான இவர்கள் மூலமாக, கிழக்கு கடற்கரை சாலையில் மற்ற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து இருப்பதால், சனி ஞாயிறு – அதுவும் இரவில் மேற்படி சாலையை தவிர்ப்பது நல்லது.

 

source of this article: Dinamalar

திண்ணை 31.10.2010

“சமைப்பது எப்படி?” படித்திருக்கிறோம். “சாப்பிடுவது எப்படி?” அதற்கும் சாஸ்திரம் இருக்கிறது.

* பகலில் ஒரு வேளையும், இரவில் ஒரு வேளையும் மட்டுமே போஜனம் செய்ய வேண்டும். சந்தியா காலம், விடியற்பொழுது, நடுநிசி ஆகிய வேளைகளில் எதையும் புசிக்கலாகாது.

* தாமரை இலை தவிர, வேறு எந்த இலையிலும் பின்புறத்தில் சாப்பிடக் கூடாது.

* போஜன காலத்தில் பேசினால், ஆயுள் குறையும்.

* ஈர வஸ்திரத்துடனும், ஒற்றை வஸ்திரத்துடனும் சாப்பிடக் கூடாது.

* மனைவி சாப்பிடும் போது, கணவன் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

* பந்தி போஜனம் பண்ணும்போது, முன்னதாக எழுந்து விடலாகாது. அப்படி எழுந்து விட்டால், அந்தப் பந்தியைச் சேர்ந்த மற்றவர்களின் பாவத்தை அவன் அடைய வேண்டும்.

* பழம், பட்சணம் இவைகளைக் குழந்தைகளுக்கு முதலிலும், மற்ற பதார்த்தங் களைப் பெரியவர்களுக்கு முதலிலும் பரிமாற வேண்டும்.

****************************************

தஞ்சை பெரிய கோவிலை ராஜராஜசோழன் கட்டி 1000வது ஆண்டு நிறைவடைந்துள்ளது. இது சம்பந்தமாக பல நூறு ஆண்டுகளாக வழங்கும் ஒரு கர்ண பரம்பரைக் கதை: சிற்பிகள் இரவு பகலாக கோவிலைக் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் கிழவி ஒருத்தியும் பங்கு கொண்டாள். சிற்பிகளுக்குத் தாகம் எடுக்கும்போது, குளிர்ந்த நீரைக் கொடுத்து உதவி வந்தாள்.எல்லாப் பணிகளும் முடிந்து, கடைசியாக கர்ப்ப கிரகத்தின் மேல் விமானம் அமைக்கும் வேலை நடந்து வந்தபோது, “பாட்டி… உங்கள் பொருள் ஏதாவது ஒன்று கொடுங்கள். அதை விமானத்தில் வைக்கிறோம்…’ என்றனர், சிற்பிகள்.”என் வீட்டு வாசற்படி தான் இருக்கிறது. வேறென்ன என்னிடம் உள்ளது?’ என்றாள் அவள்.விமானத்தின் உச்சியில் கலசங்களை அமைப்பதற்கான பிரம்மரந்திரத்தை மூடும் கருங்கல் பலகை ஒன்று தேவையாக இருந்தது. பாட்டி வீட்டு வாசற்படிக் கல்லை அதற்குப் பயன்படுத்திக் கொண்டனர்.கும்பாபிஷேகத்தை நாடு போற்றும் விதமாகக் கொண்டாடினான் ராஜராஜன். அன்றிரவு அவன் கனவில் சிவபிரான் தோன்றினார். “கோவில் அழகாக அமைந்திருக்கிறதா?’ என்று கேட்டான் மன்னன். “நீ கட்டிய கோவிலில், கிழவியின் நிழலில் சுகமாக இருக்கிறேன்…’ என்றார் சிவன்.விழித்துக் கொண்ட மன்னன், மனதில் இருந்த கர்வம் கரைந்தது. கிழவி போன்ற சிறந்த பக்தைகள் தன் நாட்டில் இருப்பதை அறிந்து மகிழ்ந்தான்.

************************************

அக்பர் பாதுஷாவுக்கு தம் ஆஸ்தான வித்வான் தான்சேனிடம் மிகுந்த மதிப்பு உண்டு. அவரது இசைப் புலமையை மிகவும் கொண்டாடினார்.ஒருநாள் அவர் தான்சேனிடம், “உன் குருவை ஒருநாள் இங்கே வந்து பாடச் சொல்ல முடியுமா?’ என்று கேட்ட போது, “அவர் இங்கே வரமாட்டார்; நாம் தான் அங்கே போக வேண்டும்…’ என்று  கூறினார் தான்சேன். தாம் பேரரசர் என்ற முறையில் இல்லாமல், சாதாரண உடுப்பு அணிந்து, தான்சேனுடன் நகருக்கு வெளியே அந்தப் பாடகரின் குரு பாவா ஹரிதாஸ் என்பவர் குடியிருந்த குடிலுக்குப் போனார் அக்பர். அவரது இசையைக் கேட்டு மெய்மறந்து இருந்தார்.சில நாட்களுக்குப் பின், ஒருநாள் தான்சேன் பாடிய போது அக்பர், “என்ன தான்சேன்… உன்னுடைய குரு எவ்வளவு நன்றாக பாடுகிறார். அவருடைய பாட்டுடன் ஒப்பிட்டால் உன் பாட்டு சப்பென்றிருக்கிறதே!’ என்றார். “பிரபுவே… நான் உங்களுக்காகப் பாடுகிறேன்; அவர், பகவானுக்காகப் பாடுகிறார். இதுதான் காரணம்!’ என்றார் தான்சேன்.

source of  this article: Dinamalar

மனுஷனா பாருங்க!


சமீபத்தில், ஒரு நாள், பகல் பதினொரு மணி அளவில், திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் உள்ள கல் பலகையில் அமர்ந்திருந்தேன். சிறிது தள்ளி ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர், சோகத்தோடு உட்கார்ந்திருந்தார். அப்போது, இரண்டு கால்களும் ஊனமான ஒருவன், கைகளை ஊன்றித் தவழ்ந்தவாறு அவரிடம் வந்து காசு கேட்டான். அதற்கு அவர்,  “தம்பி… எங்கிட்ட காசு இல்லை. என் பழைய நண்பரைப் பார்ப்பதற்கு இங்கு வந்தேன். பஸ்சை விட்டு இறங்கும் போது, கூட்டத்தில் யாரோ என் பர்சைத் திருடிட்டாங்க. அதில், நண்பரோட வீட்டு முகவரி, மொபைல் நம்பர் இருந்தது. இப்ப எல்லாமே போச்சு. திரும்ப ஊருக்குப் போகக் கூட பணமில்லை;  இங்கே தெரிஞ்சவங்களும் இல்லை.  இருபது ரூபா இருந்தாக் கூடப் போதும்… ஊருக்குப் போயிடுவேன்!’ என்று கவலையோடு சொன்னார்.அவர் சொன்னதைக் கேட்ட அந்த பிச்சைக்காரன், என்னைப் பார்த்தான். நான் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி விட்டதால், பஸ்சுக்காக 5 ரூபாய் மட்டுமே வைத்திருந்தேன்.  அதனால், கையை விரித்தேன். அவன் எதுவும் பேசாமல், திரும்பி கைகளை ஊன்றி வேகமாகத் தவழ்ந்து சென்றான்.ஐந்து நிமிடம் சென்றதும் திரும்பவும் வந்தான். அவன் கை விரல் இடுக்கில், ரெண்டு பத்து ரூபாய் நோட்டு இருந்தது. நோட்டை, அந்த பெரியவரிடம் நீட்டியபடியே, “ஐயா… இந்தாங்க இருபது ரூபா. வாங்கிக்கிட்டு நீங்க ஊருக்குப் கிளம்புங்க…’  என்றான். அவர் பணத்தை வாங்காமல், அவனை வியப்புடன் பார்த்தார்; நானும் பார்த்தேன். “என்னய்யா யோசிக்கிறீங்க… மனிதனுக்கு மனிதன் செய்யும் சின்ன உதவிதான் இது. ஆனா, நீங்க என்னை மனுஷனா நினைக்கல. ஒரு நொண்டி பிச்சைக்காரரிடம் பணம் வாங்குவதை அவமானமா நினைக்கிறீங்க. என்னையும் மனுஷனா நினைங்க. எனக்கும் மனசு இருக்கு, மனசாட்சி இருக்கு!’ என்றான். “தம்பி… அப்படியெல்லாம் நினைக்கல. உன் அன்பை பார்த்து அசந்திட்டேன்!’  என்றவர், அவனிடம் பணத்தை வாங்கிக் கொண்டார். “நாளைக்கே உன்னை வந்து பார்க்கிறேன்…’ என்று  சொல்லிவிட்டுப் புறப்பட்டார். மனித நேயம் என்பது, நல்ல உள்ளங்களில் மட்டுமே வாழ்கிறது என்று கேள்விப்பட்டிருக்கேன். அப்படி ஓர் உயர்ந்த உள்ளத்தை அந்தப் பிச்சைக்காரரிடம் கண்டேன்.

எழுதியவர் ஆ.சந்திரன், கன்னிவாடி.

தினமலர் நாளிதழுக்காக

article source: Dinamalar

picture source: wikipedia

வியக்க வைத்த செங்கிஸ்கான்

Emperor Genghis Khan (1162 - 1227)

 

{Tip: To view the text in larger size, press the ctrl button in your keyboard and scroll the mouse wheel}

சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த பேரரசர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான பிரமிப்பும் மிரட்சியும் கொஞ்சம்கூட குறையவில்லை. காரணம், அவரது போர்த்திறன், ஆளுமை, வலிமை. நூற்றாண்டுகள் பல கடந்தாலும் மங்கோலியா என்ற தேசத்தின் ஒரே ஐகான் அவரே.

அவர் பிறந்தது சாதாரணமான ஒரு மங்கோலிய நாடோடிக் கூட்டத்தில். அப்போது மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. சிதறிக் கிடக்கும் நாடோடிக் கூட்டங்களை எல்லாம் ஒன்றிணைத்து ‘மங்கோலியா’ என்ற வலிமையான தேசத்தை உருவாக்க வேண்டும் என்பதே செங்கிஸ்கானின் கனவு. செய்து காட்டினார். தன் துணிச்சலாலும் துடிதுடிப்பாலும் உலகமே அண்ணாந்து பார்க்கும் வகையில் மங்கோலியப் பேரரசையும் அமைத்தார். மாவீரன் அலெக்ஸாண்டரின் பேரரசைவிட செங்கிஸ்கான் அமைத்த பேரரசு நான்கு மடங்கு பெரியது.

அவருக்குப் பின் அவருடைய வாரிசுகள் ராஜ்ஜியத்தை மேலும் விரிவாக்குவதில் பெரும் வெற்றி கண்டனர். கொரியா, ஹங்கேரி, பால்கன், பாக்தாத், மெசபடோமியா, சிரியா என்று அனைத்து திசைகளிலும் மங்கோலியர்களின் ஆதிக்கம்தான். ரஷ்யா, ஐரோப்பியா, சீனா மீதான மங்கோலியர்களின் படையெடுப்புகளும் தொடர்ந்தன. கி.பி. 1260&ல் செங்கிஸ்கானின் பேரனான குபிலாய் கான், மங்கோலிய ராஜ்ஜியத்தின் ஐந்தாவது பேரரசர் ஆனார். கிழக்கு ஆசியாவில் யுவான் பேரரசை உருவாக்கினார். சீனாவின் சாங் பேரரசை வீழ்த்தினார். சீனா முழுவதையும் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்த அவர், பெய்ஜிங்கைத் தலைநகராக அறிவித்து அங்கிருந்து ஆட்சிபுரிய ஆரம்பித்தார்.

‘நாம் இப்போது பெய்ஜிங்தான் சென்று கொண்டிருக்கிறோமா?’ – நிக்கோலோ போலோ (மார்க்கோ போலோவின் தந்தை) குபிலாய் கானின் தூதுவரிடம் கேட்டார்.

‘இல்லையில்லை. கோடைக்காலத்தில் கான் சாங்டூவில் கோடைக்கால முகாமில் தங்கியிருப்பார்.’

பெய்ஜிங்குக்கு வடமேற்கில் சுமார் 180 மைல் தொலைவிலுள்ள இடம் அது. அவர்கள் பட்டுச் சாலையில் அதை நோக்கித்தான் சென்று கொண்டிருந்தார்கள். வழியெங்கும் குபிலாய் கானின் ஆதிக்கப் புகழை பல்வேறு விதங்களில் காட்சிகளாகவும் வார்த்தைகளாகவும் உணர முடிந்தது. அவருடைய தூதுவரும் கானின் வலிமையை, அவரது வெற்றிகளையெல்லாம் சொல்லிக் கொண்டே வந்தார். போலோ சகோதரர்-களுக்கு கானைச் சந்திக்க உள்ளூர ஆர்வமும் இருந்தது, கூடவே பயமும். கான், தங்களை என்ன மாதிரி நடத்துவார்?

‘மேற்கிலிருக்கும் தேசங்களைப் பற்றி தெரிந்து-கொள்ள கான் எப்போதுமே விரும்புவார். அங்கிருந்து வரும் வியாபாரிகளான உங்களைச் சந்தித்தால் மகிழ்ச்சியடைவார்.’

புக்காராவிலிருந்து சாங்டூவை அடைய அவர்-களுக்கு ஒரு வருடம் பிடித்தது. தாற்காலிகக் கூடாரங்களால் முகாம் நிறைந்திருந்தது. சில பிரம்மாண்ட கூடாரங்களை நகர்த்திச் செல்லும் விதத்தில் சக்கரங்கள் பொருத்தியிருந்தார்கள். அப்படிப்பட்டதொரு கூடாரத்தில்தான் குபிலாய் கான் இருந்தார்.

தரையோடு தரையாகப் பணிந்து வணங்கிக் கிடந்த போலோ சகோதரர்களை எழுந்து நிற்கச் சொன்னார் கான். ‘உங்களைச் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் எனது விருந்தினர்கள். நன்றாக ஓய்வெடுங்கள். நிறைய பேசலாம்.’ கானின் கம்பீரமான தோற்றமும், உள்ளுக்குள் அதிர்வை ஏற்படுத்தும் குரலும், போலோ சகோதரர்களைக் கட்டிப் போட்டன. வியாபார நிமித்தமாக பல்வேறு மொழிகளை அறிந்து வைத்திருந்த சகோதரர்களுக்கு, கான் பேசிய தத்தார் மொழியும் தெரியும் என்பது வசதியாக இருந்தது.

ஐரோப்பிய நாடுகளின் அப்போதைய நிலை என்ன, யார் யாருக்கு யாருடன் பிரச்னை, எந்தப் போரில் யார் வென்றார்கள், வெனிஸ் எப்படிப்பட்ட நகரம், கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றியது எப்படி, வெனிஸியர்களின் போர்த் தந்திரம் என்ன, ஐரோப்பியர்கள் எந்த மாதிரியான ஆயுதங்களை உபயோகப்படுத்துகிறார்கள், என்னென்ன பொருட்களை எல்லாம் வணிகம் செய்கிறார்கள், மத்திய தரைக்கடலில் உள்ள வியாபார வாய்ப்புகள் என்னென்ன – போலோ சகோதரர்களுடனான அடுத்தடுத்த சந்திப்புகளில் குபிலாய் கான் பல்வேறு விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். ஐரோப்பிய நாடுகள் மீது படையெடுத்துச் செல்ல திட்டமிடுவதற்காக இந்த விசாரணை.

Genghis Khan and three of his four sons

கானின் விருந்தோம்பலில் போலோ சகோதரர்கள் மயங்கிக் கிடந்தார்கள். அங்கே அவர்கள் சந்தித்த மங்கோலியர்கள், சீனர்கள், யூதர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் குபிலாய் கானை ஒரு கடவுள் போலத்தான் நினைத்தார்கள். புத்த மதத்தை ஆட்சி மதமாக அங்கீகரித்திருந்த கான், அனைத்து மதத்தினருக்கும் அவரவர்க்குரிய வழிபாட்டு உரிமையை வழங்கியிருந்தார். கான் குறித்து அங்கே உலவிய பல செய்திகள் போலோ சகோதரர்களை வாய் பிளக்க வைத்தன.

‘கான், உணவருந்தும் அறைக்குச் சென்று அமருவார். அப்போது அங்கே இருக்கும் மேசை சில அடி உயரத்துக்குத் தானாக எழும்பி மிதக்கும். இன்னொரு மேசையில் உணவுப் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும். அந்த மேசையிலிருந்து சாப்பிடும் மேசைக்கு உணவுப்பொருட்கள் தானாக இடம் மாறும். வட்டுகளில் திட உணவுப் பொருட்களும், குவளைகளில் பால், ஒயின் போன்ற பானங்களும் தானாக நிரம்பும். பின் சாப்பிடும் மேசை காற்றில் மிதந்து சென்று கானின் அருகில் சென்று தரையிறங்கும். ஏதாவது ஒரு பொருளை கான் மேலும் விரும்பினார் என்றால் அது மீண்டும் தானாக நிரம்பும். கான், உண்டு முடித்தபின் மேசையும் பாத்திரங்களும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்பி வந்துவிடும். பல விருந்தினர்களும் கான் உணவருந்தும் இந்த அதிசயத்தைக் கண்டுகளித்திருக்கிறார்கள்.’

பலரும் சொன்ன இந்தச் சம்பவம் குறித்து சகோதரர்கள் விசாரித்துப் பார்த்தார்கள். காஷ்மீரிகளான பக்ஸி என்றழைக்கப்படும் கண்கட்டு வித்தை செய்பவர்கள், அவர்கள் வணங்கும் தேவதைகள் துணையுடன் நிகழ்த்தும் அதிசயம் இது என்று பதில் கிடைத்தது. கிறித்துவ மதத்தைச் சார்ந்த சகோதரர்களால் அவற்றை நம்பவே முடியவில்லை.

‘கிறித்துவ மதத்தின் சிறப்புகளாக என்ன சொல்லுவீர்கள்?’ அன்றைய சந்திப்பில் குபிலாய் கான் கேட்டார். போலோ சகோதரர்களும் தமது கருத்துகளை, ஐரோப்பாவில் கிறித்துவ மதம் செழித்து வளரும் விதத்தைப் பகிர்ந்துகொண்டார்கள். ‘நீங்கள் உங்கள் மதத் தலைவரைச் (போப்) சந்தித்-திருக்கிறீர்களா? என் சார்பில் தூதுவராகச் சென்று சந்திக்க இயலுமா?’

கான் இப்படிக் கேட்டதும் சகோதரர்கள் வாயடைத்துப் போனார்கள். கான் சார்பில் போப்பைச் சென்று சந்திப்பது என்பது பெறுதற்கரிய கௌரவம்தான். ஆனால் எதற்குச் சந்திக்க வேண்டும்? கானும் கிறித்துவ மதத்துக்கு மாற விரும்புகிறாரா? ஆனால் அதை அவரிடம் நேரடியாகக் கேட்க முடியாதே.

‘நான் கிறித்துவ மதத்துக்கு மாற விரும்புகிறேனோ என்று நீங்கள் சந்தேகப்படலாம். என் ராஜ்ஜியத்தில் அனைத்து மதத்தினரையும் ஆதரிப்பவன் நான். இறைவனின் தூதர்களாக மக்கள் வணங்கும் கிறித்துவர்களின் இயேசுவோ, இஸ்லாமியர்களின் நபியோ, யூதர்களின் மோஸஸோ, சிலைகளை வணங்கு-வோரின் தெய்வங்களோ – எல்லோரையுமே நான் விரும்பி வணங்குகிறேன். நால்வரில் யார் உன்னதமானவர்களோ அவர்கள் என்னை ஆசிர்வதிக்கட்டுமே.

சிலைகளைக் கடவுளாக வணங்குபவர்கள் என்முன் பல அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் கைபடாமல் எனக்கு உணவு பரிமாறுகிறார்கள். சிலைகளைப் பேச வைக்கிறார்கள். மழை பெய்ய வைக்கிறார்கள். அதை நிறுத்தவும் செய்கிறார்கள். தீய சக்திகளை அடக்கியாள்கிறார்கள். நான் கண்ட கிறித்துவர்கள் யாரும் அத்தனை சக்தி வாய்ந்தவர்களாக, திறமையானவர்களாகத் தெரிய-வில்லை. அப்படி இருக்கும்போது நான் கிறித்துவனாக ஞானஸ்நானம் பெற்றுக் கொள்வதை என் அரசவையில் உள்ளவர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே உங்கள் மதத் தலைவரிடம் சென்று கிறித்துவ மத நெறிகளில் நன்கு பயிற்சி பெற்ற, அரிய செயல்கள் செய்யக்கூடிய, அதிசயங்களை நிகழ்த்தும் வல்லமை பெற்ற நூறு மத குருமார்களை இங்கே என் ராஜ்ஜியத்துக்கு அனுப்பச் சொல்லுங்கள். அந்த குருமார்கள் என் அரசவைக்கு வந்து எல்லோர் முன்பும் சிலைகளை வணங்குபவர்களுடன் மோதட்டும். தீய சக்திகளை அடக்கி அவர்களை வென்று காட்டட்டும். அப்போது நான் கிறித்துவ மதத்துக்கு மாறுகிறேன். என்னைத் தொடர்ந்து என் அரசவையில் உள்ளவர்களும், என் மக்களும் மதம் மாறுவார்கள். இதெல்லாம் நிகழ்ந்தால் உலகில் வேறெங்கும் இருப்பதைவிட என் ராஜ்ஜியத்தில்தான் அதிக கிறித்துவர்கள் இருப்பார்கள். இதை உங்கள் மதத் தலைவரிடம் தெரியப்படுத்துங்கள்.’

குபிலாய் கான் கிறித்துவ மதத்தைத் தழுவ நினைத்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஆளுக்கொரு மதம், ஆளுக்கொரு கடவுள் என்று தன் ராஜ்ஜியம் முழுவதும் மக்கள் பிளவுபட்டுக் கிடப்பதைவிட, கிறித்துவம் என்ற ஒரே மதத்தின் கீழ் ஒன்றிணைந்தால் வலிமை பெருகும் என்று கணக்கிட்டார். போப்பைச் சந்திக்கச் செல்வதற்காக போலோ சகோதரர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. பயணத்துக்குத் தேவையான குதிரைகள், ஒட்டகங்கள், செல்வங்கள், துருக்கிய மொழியில் எழுதப்பட்ட போப்புக்கான தூதுக் கடிதம், குபிலாய் கானின் முத்திரையுடன் கூடிய தங்கப் பட்டயம் (அதுதான் விசா), கூடவே பயணத்தில் துணைவர அதிகாரி ஒருவர். அவர் பெயர் கோகட்டல்.

‘ஜெருசலேமில் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் அந்த விளக்கினுடைய புனித எண்ணெயையும் எடுத்து வாருங்கள்.’

கி.பி. 1266&ல் போலோ சகோதரர்கள் விடைபெறும் நேரத்தில் குபிலாய் கான் சொன்ன வேலை இது. வியாபாரிகளாக அங்கே வந்தார்கள். கானின் நன்மதிப்பைப் பெற்று போப்பைச் சந்திக்கச் செல்லும் தூதுவர்களாகக் கிளம்பினார்கள். அவர்களுக்கு அதில் பெருமைதான். ஆனால் உடன் துணைக்கு வர அமர்த்தப்-பட்ட கோகட்டலுக்குப் பயணத்தில் கொஞ்சம்கூட இஷ்டமே இல்லை. ஆரம்பம் முதலே புலம்பிக் கொண்டு வந்தார். ‘மீண்டும் நான் திரும்பிவர எத்தனை வருடங்களாகுமோ? எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம் வர வேண்டும்?’

சில வாரங்கள் கடந்திருக்கும். கோகட்டல் நோய்வாய்ப்பட்டார். படுத்த படுக்கையாகக் கிடந்தார். குணமாகும் வரை காத்திருந்து அவரை அழைத்துக் கொண்டு போனாலும் புலம்பல் நிற்காது. ‘அய்யா, நாங்கள் எங்கள் பயணத்தை, பணிகளைப் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் உடல்நிலை சரியானதும் ஊர் திரும்புங்கள். கானிடம் விஷயத்தைச் சொல்லிவிடுங்கள். வருகிறோம்.’

சுமார் மூன்று வருடங்கள் பயணம் செய்து, கி.பி. 1269&ல் அவர்கள் போப் இருந்த நகரமான ஜெருசலேமின் ஏக்ராவை (கிநீக்ஷீணீ) அடைந்தபோது கேள்விப்பட்ட செய்தி போலோ சகோதரர்களை நிலைகுலைய வைத்தது.

‘போப் ஆறாம் கிளமெண்ட் இறந்துவிட்டார்..!’

——————————–

Original source of this article: Tamilaga Arasiyal

Image source: Wikipedia

wajig: Debian Administration simplified

wajig is simple front end to the Debian package management tools like APT and dpkg.
It provides the functionality of tools like apt-get, dpkg, apt-cache etc.

“Wajig is designed to run in such a way as to suit the system it is running on and the policies of the system administrators.  It can be run as a normal user, but once a privileged command is required it will use either su and ask for the root user’s password, or else it can use sudo and rely on the normal user’s password.” : says the wajig documentation.

The following tips provide information on how to use wajig:

$ wajig -v help

displays all commands that could be used with wajig.

Wajig expects a command and will call upon other Debian tools to perform the command.  Commands can be in mixed case and with hyphens and underscores, and internally these are mapped to the one command. Thus, the commands `Install’, `INSTALL’, `install’ and even `in-stall’ are interpreted identically.

$ wajig editsources

This command is used to edit the file /etc/apt/sources.list, that contains the information about where to fetch the package you have chosen to install using a command like sudo apt-get install <package name>

$ wajig last-update

This command checks when you last did an update.

$ wajig new

This lists what new packages have been added to Debian.

For a complete list of the packages you have installed but for which there are newer versions available on the archive use:

$ wajig toupgrade

To check the version of any installed package and also the version available from the archive previously (i.e., the last time, but one, you performed an upgrade) and now (based on the last time you performed an update), and to also see the so called Desired and Status flags of the package, use:

$ wajig status <package names> (similar to dpkg -l)

Without a list of package names all installed packages will be listed.

A variation is to list the status of all packages with a given string in their name:

$ wajig status-search <string>

To check for a particular package for which you might guess at part of  its name you can use:

$ wajig listnames <string> (apt-cache pkgnames)

To list the names and current install status of all installed packages then use:

$ wajig list

You can also list just the names of the packages installed with:

$ wajig list-installed

And if you are looking for a particular installed package with a name containing a particular string then use:

$ wajig list-installed <string>

To list a one line dscription for a package use:

$ wajig whatis <package name>

And to find which package supplies a given file use:

$ wajig whichpkg <command or file path>

and for a command (e.g., most):

$ wajig whichpkg $(which -p most)

The more detailed description of a package is available with:

$ wajig detail <package-name>

To install a new package (or even to update an already installed package) all you need do is:

$ wajig install <package name>        (apt-get install)

(Instead of install you could equivalently say update.)

You can list multiple packages to install with the one command.

The install command will also accept a .deb file.  So, for example, if  you have downloaded a Debian package file (with the .deb extension) you can install it with:

$ wajig install <.deb file> (dpkg -i)

The .deb file will be searched for in both the current directory and in the apt archive at /var/cache/apt/archive/.

You can list multiple .deb files to install.

If the .deb package file you wish to install is available on the internet you can give its address and wajig will download then install it:

$ wajig install http://samfundet.no/debian/dists/woody/css/xine-dvd-css.deb

Sometimes you may want to install many packages by listing them in a file, one per line.  You can do this with:

$ wajig fileinstall <filename> (apt-get install)

The file of packages to install can conveniently be created from the list of installed packages on another system with:

$ wajig listinstalled > <filename> (dpkg –get-selections)

You can upgrade all installed packages with:

$ wajig upgrade (apt-get -u upgrade)

A neat trick with wajig is the ability to upgrade a collection of packages all with the same version number to another common version number:

$ wajig status | grep 3.2.3-2 | grep 3.3.0-1 | cut -f1 > list
$ wajig install-file list

Once a package is installed you can remove it with:

$ wajig remove <package name> (apt-get remove)

Once again, you can list multiple packages to remove with the one command.

A remove will not remove configuration files (in case you have done some  configuration of the package and later re-install the package).
To get rid of the configuation files as well use:

$ wajig purge <package name> (apt-get –purge remove)

Whenever a package is installed, upgraded, or removed, a log is kept. Yo list the whole log:

$ wajig list-log

RedHat is certainly the leader in terms of installed base. Some packages (particularly commercial packages) are available as RedHat packages (with the rpm extension). These can usually be installed in Debian with little effort.  The alien package is required to convert the rpm into deb format which can then be installed. This is taken
care of by wajig:

$ wajig rpminstall gmyclient-0.0.91b-1.i386.rpm

In addition to managing the installed packages wajig also allows you  to start, stop, reload, and restart services (which are often provided by so called daemons—processes that run on your computer in the background performing various functions on an on-going basis).  The commands all follow the same pattern:

$ wajig restart <service name> (/etc/init.d/<service> restart)

The start and stop commands are obvious.  The restart command generally performs a stop followed by a start.  The reload command will ask the daemon to reload its configuration files generally without stopping the daemon, if this is possible.  The services you can specifiy here depend on what you have installed.  Common services
include:
apache Web server
cron Regular task scheduler
exim Email delivery system
gdm The Gnome Windows Display Manager (for logging on)
ssh The Secure Shell daemon

Generally, daemons are started at system boot time automatically.

When packages are installed from the Debian Archives the corresponding deb files are stored in /var/cache/apt/archive.  This can become quite populated with older versions of packages and we can clean out these older versions with:

$ wajig autoclean (apt-get autoclean)
Warning: It is sometimes useful to have older versions of packages hanging around if you are tracking the unstable release.  Sometimes the newer versions of packages are broken and you need to revert to an older version which may not be available from the Debian archives, but might be in your local download archive.

If you get short of disk space then you might want to remove all the downloaded deb files (not just the older versions of downloaded files) with:

$ wajig clean (apt-get clean)

————–

all these tips have been copied from the wajig documentation.

To view this documentation type:

$ wajig doc | less

For more info:

$ wajig list-commands
$ wajig -v commands
$ wajig help

Wajig official page